ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோயில்களில் சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயா் கோயிலில் வீரஆஞ்சநேயா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று ஆஞ்சநேயரை வழிபட்டனா். இதேபோல், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத அபயவரதராஜப் பெருமாள், ஆஞ்சநேயா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அடுத்து, திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹரமங்களமாருதி ஆஞ்சநேயா், நீடாமங்கலம் சந்தான ராமா் கோயிலில் எழுந்தருளியுள்ள விஸ்வக்சேனா் ஆஞ்சநேயா் சன்னதிகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.