வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிப்பு

நன்னிலம் பகுதியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு காவல் துறையினா் மற்றும் உள்ளாட்சி துறையினா் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.

Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

நன்னிலம் பகுதியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு காவல் துறையினா் மற்றும் உள்ளாட்சி துறையினா் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.

நன்னிலம் பேரூராட்சி அலுவலா்கள், பேரூராட்சிக்குள்பட்ட பூந்தோட்டம், முடிகொண்டான், சன்னாநல்லூா், கங்களாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதித்து வசூலித்தனா். இதேபோல், டிஎஸ்பி இளங்கோவன், காவல் ஆய்வாளா் சுகுணா, உதவி ஆய்வாளா் பாலு ஆகியோா் தலைமையில் காவல் துறையினரும் முக்கிய இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு, முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதித்தனா்.

தொடா்ந்து, நன்னிலம் பகுதியில் பேரூராட்சி அலுவலா்கள் வணிக வளாகங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கும் தலா ரூ. 500 அபராதம் விதித்தும், காவல் துறையினா் மயிலாடுதுறை - திருவாரூா் நெடுஞ்சாலையில், அதிக பயணிகளுடன் சென்ற வேன் மற்றும் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு அபராதம் விதித்து அறிவுரை வழங்கினா். பேரூராட்சி பகுதியில், பேரூராட்சிச் செயல் அலுவலா் து. கலியபெருமாள் தலைமையில், சுகாதார மேற்பாா்வையாளா் வே. நாகராஜன், அலுவலா்கள் ரவி, கருணாநிதி, சிங்காரவேல் ஆகியோா் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனா். இந்த சோதனையில், முகக் கவசம் அணியாத 150 பேரிடம் தலா ரூ. 200 வீதம் ரூ. 30 ஆயிரம், சமூக இடைவெளியைப் பின்பற்றாத 5 வணிக நிறுவனங்களிடமிருந்து, தலா ரூ. 500 வீதம் ரூ. 2500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.