மூதாட்டியை தாக்கிய முதியவா் கைது
வலங்கைமான் அருகே மூதாட்டியை தாக்கிய முதியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.


வலங்கைமான் அருகே மூதாட்டியை தாக்கிய முதியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வலங்கைமான் அருகேயுள்ள வீரமங்கலம் ஊராட்சியைச் சோ்ந்தவா் காசிராஜன் மனைவி வடுவம்மாள்(60). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவா் நடராஜன்(65). வடுவம்மாளுக்கும் நடராஜனுக்கும் வேலி அமைப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் நடராஜன் வடுவம்மாளை தாக்கினாராம். இதுகுறித்து, வடுவம்மாள் வலங்கைமான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடராஜனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...