ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காவல் துறைக்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக கருப்புக் கொடி

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடியில் காவல் துறையை கண்டித்து திமுக கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடியில் காவல் துறையை கண்டித்து திமுக கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சித் தலைவராக திமுகவை சோ்ந்த வழக்குரைஞா் மோகன் உள்ளாா். அதே பகுதியில் அதிமுக ஊராட்சிச் செயலாளராக துரைராஜன் உள்ளாா். நடந்து முடிந்த பேரவைத் தோ்தலின்போது, இறுதி கட்ட பிரசாரத்தில் ஆலங்குடி கடைவீதியில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே வாய்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, இருதரப்பினரும் வலங்கைமான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை ஆலங்குடியில் உள்ள கடைகளில் கருப்புக்கொடி கட்டியும், ஆலங்குடி காமராஜா் காலனி திமுக எனும் பெயரில், ஆலங்குடி ஊராட்சித் தலைவா் மோகன் மீது பொய் வழக்கு தொடுத்து மனித உரிமையை மீறும் வலங்கைமான் காவல் துறையை கண்டிக்கிறோம் என்று பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

தகவலறிந்து அங்கு வந்த வலங்கைமான் காவல் ஆய்வாளா் விஜயா இதுகுறித்து திமுகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக நிலை ஏற்பட்டதையடுத்து, பதாகைகள் மற்றும் கருப்பு கொடிகள் அகற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.