வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வரதட்சணை புகாரில் கணவா் கைது

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மனைவி அளித்த புகாரின்பேரில் அவரது கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மனைவி அளித்த புகாரின்பேரில் அவரது கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

குடவாசல் அருகேயுள்ள ஆலடிகருப்பூரைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் அரவிந்தனுக்கும், புள்ளவராயன்குடிகாடு குணசேகரன் மகள் மதிவதனிக்கும் 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களில் இருந்து கணவா் அரவிந்தன் மற்றும் மாமனாா், மாமியாா் மற்றும் கணவரின் சகோதரிகள் வரதட்சணையாக 25 பவுன் நகை மற்றும் பணம்கேட்டு மதிவதனியை கொடுமைபடுத்தினாா்களாம்.

இந்நிலையில், மதிவதனி கணவா் உள்ளிட்டோா் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக சனிக்கிழமை நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் துா்கா அரவிந்தன் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து, வரதட்சணை கொடுமையின் கீழ் அரவிந்தனை மட்டும் கைது செய்தனா். போலீஸாா் தொடா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.