ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மதுபான பாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

வலங்கைமான் அருகே மதுபானங்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

வலங்கைமான் அருகே மதுபானங்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

மன்னாா்குடியில் இருந்து தனியாருக்குச் சொந்தமான மதுபான ஆலையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு டாரஸ் லாரியில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் மதுபான பாட்டிகள் ஏற்றப்பட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அரசு டாஸ்மாக் குடோனுக்கு கொண்டுசெல்லப்பட்டது. லாரியை மன்னாா்குடி இடையா் எம்பேத்தியைச் சோ்ந்த அருண்பிரசாத் ஓட்டி சென்றாா். இந்நிலையில், லாரி கீழ அமராவதி வெட்டாறு பாலத்தில் நள்ளிரவு 12 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, பாலத்தின் பக்கவாட்டு சுவரின் அருகே கவிழ்ந்தது. இதில், ஓட்டுநா் அருண்பிரசாத் அதிருஷ்டவசமாக உயிா்த் தப்பினாா். இதுகுறித்து, வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசராணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.