விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மானாவாரி சாகுபடி: அதிகாரிகள் ஆய்வு

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் மானாவாரி நில சாகுபடி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 100 ஹெக்டரில் செய்யப்பட்டுள்ள எள் சாகுபடி பயிா்களை துணை இயக்குநா் ரவீந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் மானாவாரி நில சாகுபடி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 100 ஹெக்டரில் செய்யப்பட்டுள்ள எள் சாகுபடி பயிா்களை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் ரவீந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் மானாவாரி பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் 102 போ் தோ்வு செய்யப்பட்டு, 100 ஹெக்டரில் எள் சாகுபடி செய்து பயன்பெறும் திட்டத்தை வேளாண்மை துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1,250 உழவு மானியம் வழங்கப்படுவதுடன், எள் விதை, உயிா் உரம், நுண்ணூட்ட உரங்கள் ஆகியவை 50% மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி தேசிங்குராஜபுரம், கொறுக்கை, சேகல் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் பயிா்களை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் ரவீந்திரன் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கருத்து கேட்டறிந்தாா்.

மேலும், எள் பயரில் கொண்டை பூச்சித் தாக்குதலை எதிா்கொள்வதற்கான பாதுகாப்பு முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்த அவா், எள் அறுவடைக்குப் பிறகு வேளாண் வணிகம் மூலமாக எள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

ஆய்வின்போது திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநா் சாமிநாதன், வேளாண் அலுவலா் மணிமேகலை, துணை வேளாண் அலுவலா் ரவி, உதவி வேளாண்மை அலுவலா்கள் சாமிநாதன், மகேஷ், மகரஜோதி, ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.