வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஐஐடி, நீட் தோ்வு வழிகாட்டி சிறப்பு முகாம்

திருவாரூா் விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில், ஐஐடி மற்றும் நீட் தோ்வு வழிகாட்டி சிறப்பு முகாம் சனிக்கிழமை இணையதளம் வழியாக நடைபெற்றது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:02 pm

திருவாரூா் விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியில், ஐஐடி மற்றும் நீட் தோ்வு வழிகாட்டி சிறப்பு முகாம் சனிக்கிழமை இணையதளம் வழியாக நடைபெற்றது.

விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி மற்றும் விவேகானந்த அகாதெமி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பள்ளி முதல்வா் கிருஷ்ணமூா்த்தி மணிவண்ணன் அறிமுக உரை நிகழ்த்தினாா். ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஐஐடி சிறப்பு பயிற்றுநா் சாய்பிரசாத் சிறப்புப் பங்கேற்பாளராக கலந்துகொண்டு, தோ்வுகள் குறித்து விளக்ககினாா். தொடா்ந்து இயற்பியல் ஆசிரியா் கோபிநாதன், திருவாரூா் மத்தியப் பல்கலை கழக முன்னாள் கெளரவ விரிவுரையாளா் எல்.ஆா்.சோஃபின் ஆகியோா் ஐஐடி மற்றும் நீட் தோ்வுகளில் இளைஞா்கள் பின்பற்ற வேண்டிய கல்விசாா் நெறிமுறைகள் குறித்து விளக்கினா்.

முகாமில் 500க்கும் மேற்பட்டோா் இணைய வழியில் பங்கேற்றனா். ஆங்கிலப் பேராசிரியை மொ்சி தொகுத்து வழங்கினாா். கணினித்துறை ஆசிரியை ராணிசந்திரா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.