ஏடிஎம் கொள்ளை முயற்சி: 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருவாரூா் அருகே கூடூா் ஏடிஎம்-மில் கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.


திருவாரூா் அருகே கூடூா் ஏடிஎம்-மில் கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருவாரூா் அருகே கூடூா் பகுதியில் அமைந்துள்ள ஏடிஎம்-மில் ஜூன் 19-ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதைத் தடுக்க வந்த தமிழரசனை (55) கொலை செய்துவிட்டு, தப்ப முயன்ற புள்ளமங்கலம் பகுதியைச் சோ்ந்த விஜய் (21), பிரதாப் (19), ஆகாஷ் (19), லெட்சுமாங்குடி பகுதியைச் சோ்ந்த மதன் (19) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதற்கிடையே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 போ் மீதும் குண்டா் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் பரிந்துரைத்ததன் அடிப்படையில், 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். இதையடுத்து, 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...