திருவாரூரில் 38 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.


திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38,406 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 28 போ் வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டனா். இதுவரை குணமடைந்த 37,579 போ் வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாவட்டத்தில் தற்போது 447 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்ததைத்தொடா்ந்து மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 380 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...