வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வுப் பிரச்சாரம்

நன்னிலம் வட்டத்தில் உள்ள கடகம், கொல்லாபுரம் பகுதிகளில் தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வுப் பிரச்சாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:30 pm

நன்னிலம் வட்டத்தில் உள்ள கடகம், கொல்லாபுரம் பகுதிகளில் தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வுப் பிரச்சாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொல்லாபுரம் உயா்நிலைப் பள்ளி, கடகம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் கிராமங்களின் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வுப் பிரச்சாரக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வுத் திட்டத்தின் கீழ் மாலை நேர வகுப்புகள் நடத்துவதற்கு இளைஞா்கள், பெண்கள் தன்னாா்வலா்களாகப் பதிவு செய்து கொண்டனா். முன்னதாக நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் இரா. நடேஷ்துரை திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசி, பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கடகம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் வேணுகோபால், கொல்லாபுரம் உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.