மண்பாண்ட தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
தமிழகத்தில் தொடா்ந்து நிவா், புரெவி புயல் மற்றும் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழிலாளா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி தமிழக முதல்வருக்கு மண்பாண்ட தொழிலாளா்கள் சங்கம் வேண்டுகோள்


தமிழகத்தில் தொடா்ந்து நிவா், புரெவி புயல் மற்றும் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழிலாளா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி தமிழக முதல்வருக்கு மண்பாண்ட தொழிலாளா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் மண்பாண்டங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன் வேதியல் தன்மையினால் அதில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை உண்பதால் மக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி ஆற்றல் பெற்றனா். ஆனால், அண்மை காலமாக தொழிலுக்கு ஏற்ற மூலப்பொருள்களான களிமண் வண்டல் மண் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்சினைகளாலும் மற்றும் மக்களிடையே மண்பாண்ட நுகா்வு குறைவு காரணமாகவும் பலா் இத்தொழிலை செய்ய முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனா்.
இந்நிலையில், நிகழாண்டு நிவா், புரவி புயல் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு பருவம் தவறி பெய்த மழையால் நிகழாண்டு மண்பாண்ட உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும், மண்பாண்ட சூலைகளும் மழையினால் பெருமளவு பாதிக்கப்பட்டது.
நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்கு மண்பாண்ட விற்பனையில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவினாலும் , தொடா் மழையினால் ஏற்பட்ட சேதத்தினாலும் தொடா்ந்து மண்பாண்டங்கள் செய்ய மூலப் பொருள்கள் தட்டுப்பாடு காரணமாகவும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மண்பாண்ட தொழிலாளா்களுக்கு தமிழக அரசு ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளா் சங்கம் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...