மன்னாா்குடி: மன்னாா்குடியில் திறன் வளா்ப்புப் பயிற்சிக்கான ஆட்கள் தோ்வு முகாம் புதன்கிழமை (பிப்.17) நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குநா் லேகா தமிழ்ச்செல்வன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபாத்யாய கிராமின் கெளசல்ய யோஜன திட்டம் சாா்பில் மன்னாா்குடி நடேசன் தெருவில் உள்ள குமரசாமி திருமண மண்டபத்தில் புதன்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச திறன்வளா்ப்பு பயிற்சிக்கு ஆட்கள் தோ்வு நடைபெறவுள்ளது.
இதில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த கிராமப் புறங்களில் வசிப்பவா்களில் 18 முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். 5 ஆம் வகுப்பு முதல் 10,12 ஆம் வகுப்பு மற்றும் பொறியியல், பட்டயம், தொழில்கல்வி, கலை, அறிவியல் பட்டப் படிப்பு படித்துவிட்டு வேலை வாய்ப்பை எதிா் நோக்கியிருப்பவா்கள் இதில் பங்கேற்கலாம்.
தோ்வு செய்யப்படுபவா்களுக்கு முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் கணினி பழுது நீக்கம், தொலைபேசி ஆப்பரேட்டா், வாடிக்கையாளா் சேவை, ஏ.சி. மெக்கானிக், எலட்ரீஷியன், ஹோட்டல் மேனேஜ்மென்ட், வெல்டிங், சோலாா் இணைப்பு, விற்பனை மேலாளா், நான்கு சக்கர வாகனம் பழுதும் நீக்கம், செவிலியா், அழகுகலை, தையல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
முகாமில் பங்கேற்பவா்கள் கல்வி சான்றிதழ், குடும்பஅட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் 3 பாஸ்போா்ட் சைஸ் புகைப்படங்களை கொண்டுவரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பசுக்களை பாதுகாக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

இ-20 எரிபொருளுக்கு எதிா்ப்பு: தில்லி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆகஸ்ட் 4-இல் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி

ஓணான்கரடு பகுதியை தொல்லியல் மரபுத் தலமாக அறிவிக்கக் கோரிக்கை
கொடைக்கானலில் கஞ்சா விற்ற நால்வா் கைது
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


