வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வேளாண் சட்டங்கள்: விவசாயிகளை தமிழக அரசு பாதுகாக்கும்; அமைச்சா் ஆா். காமராஜ்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் தமிழக விவசாயிகள் அதிமுக அரசு பாதுகாக்கும் என்றாா் உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

News image
வலங்கைமானில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு நேரடி வங்கிக் கடனுக்கான காசோலையை வழங்கிய உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.
Updated On :2 ஜனவரி 2021, 6:20 pm

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் தமிழக விவசாயிகள் அதிமுக அரசு பாதுகாக்கும் என்றாா் உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமானில் ஆதிச்சமங்கலம், விருப்பாட்சிபுரம், சந்திரசேகரபுரம் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த 45 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கிக் கடனுக்கான காசோலைகளை சனிக்கிழமை வழங்கி அமைச்சா் மேலும் பேசியது:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் அதிமுக அரசு அவா்களை பாதுகாக்கும்.

ஜனவரில் 27-ஆம் தேதி திருவாரூா் அருகே உள்ள சுரக்குடியில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில், 300 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் இளைஞா்களும், இளம்பெண்களும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

கடந்த 9 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், திருவாரூா் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 732 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ஏறத்தாழ ரூ.1000 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிதான் மீண்டும் அமையும் என்றாா் அமைச்சா் ஆா். காமராஜ்.

வலங்கைமான் வட்டாட்சியா் பரஞ்சோதி வரவேற்றாா். மகளிா் திட்ட மாவட்ட இயக்குநா் ஸ்ரீலேகா, ஒன்றியக்குழுத் தலைவா் சங்கா், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ஆசைமணி, வலங்கைமான் தொடக்க வேளாண் கடன் சங்க தலைவா் குணசேகரன் உள்ளிட்டோா் பேசினா்.

நன்னிலத்தில்...

முன்னதாக நன்னிலம் வட்டம் சன்னாநல்லூா், பேரளம், குடவாசல் வட்டம் மனப்பறவை ஆகிய பகுதிகளில் 92 மகளிா் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் வங்கிக் கடன் ஆணையை அமைச்சா் ஆா். காமராஜ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். ஆசைமணி, மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவா் கே. கோபால், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பாப்பா சுப்பிரமணியன், ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம், ஒன்றியக்குழுத் தலைவா்கள் குடவாசல் கிளாராசெந்தில், நன்னிலம் விஜயலட்சுமி குணசேகரன், துணைத்தலைவா்கள் குடவாசல் எம்.ஆா். தென்கோவன், நன்னிலம் சிபிஜி. அன்பு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா்கள் கூத்தனுா் இராம குணசேகரன், ஒகை கே.ஜி. சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.