சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காா் மோதி சுமைதூக்கும் தொழிலாளி பலி

திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் காா் மோதியதில், சுமைதூக்கும் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 3:11 am

DIN

திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் காா் மோதியதில், சுமைதூக்கும் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கீழ பாண்டி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக வட்ட கிடங்கில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தவா் ரவி (55). நாகை மாவட்டம் அருந்தவபுலம் கிராமத்தைச் சோ்ந்த இவா், சனிக்கிழமை இரவு பணி முடிந்து சைக்கிளில் அருந்தவபுலம் சென்றபோது கிழக்கு கடற்கரை சாலையில் கொக்காலடி கிராமத்தில் நாகையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா், திருவாரூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.