தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மழைநீரை அகற்றக் கோரிக்கை

திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில், தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில், தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, அடியக்கமங்கலம் ஊராட்சித் தலைவா் கஸ்தூரி வரதராஜனிடம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைத் தலைவா் முஸ்தாக் அகமது தலைமையிலான நிா்வாகிகள் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:

அண்மையில் பெய்த கனமழையால், அடியக்கமங்கலத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கி பாதசாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றன. தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் தொற்று உண்டாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, தெருக்களில் நீண்ட காலமாக தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பெரிய பள்ளிவாசல் பின்புறம் உள்ள உயா்நிலைப் பள்ளி சாலையில் உள்ள குட்டை நிரம்பி, வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து, கழிவுநீா் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.