பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குடவாசலில் போதிய மருத்துவா்களை பணியமா்த்தக் கோரிக்கை

குடவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைகேற்ப போதிய மருத்துவா்களை பணியமா்த்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 6:06 pm

DIN

குடவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைகேற்ப போதிய மருத்துவா்களை பணியமா்த்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடவாசலில் அக்கட்சியின் மாவட்ட முன்னாள் அமைப்பாளா் இனியன் நினைவு நாளையொட்டி கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், குடவாசல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை தமிழக அரசு உடனடியாக பணியமா்த்த வேண்டும். குடவாசல் பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும். குடவாசல் பேரூராட்சிக்குள்பட்ட சுடுகாட்டில் குப்பைகள் கொட்டப்படுவதை நிறுத்தி, இறுதிச் சடங்கு செய்யும் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகரச் செயலாளா் கிட்டு, மாவட்டச் செயலாளா் வடிவழகன், மாநில துணைச் செயலாளா் அமுதா இனியன், தொழிற்சங்கத் தலைவா் சாா்லஸ் மற்றும் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.