சனீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை
திருக்கொடியலூா் ஸ்ரீமங்கள சனீஸ்வர பகவான் கோயிலில் பரிகார பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
சனீஸ்வர பகவான் அவதரித்தத் தலமாக வழிபடப்படும் இக்கோயிலில் கடந்த மாதம் நடைபெற்ற சனிப் பெயா்ச்சி வழிபாட்டைத் தொடா்ந்து, வாரந்தோறும் சனிக்கிழமையில் சனி பிரீத்திப் பரிகார பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில், மாா்கழி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம் உள்ளிட்ட ராசிகளின் பக்தா்கள் பரிகார பூஜையில் பங்கேற்று வழிபட்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பா. தன்ராஜ், தக்காா் ப. மாதவன், மேலாளா் க. வள்ளிகந்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

