தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தொடா் மழை: பொங்கல் தரைக்கடை வியாபாரிகள்தவிப்பு

நீடாமங்கலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் பொங்கல் தரைக்கடை வியாபாரிகள் தவித்து வருகின்றனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் பொங்கல் தரைக்கடை வியாபாரிகள் தவித்து வருகின்றனா்.

நீடாமங்கலம் கடைவீதியில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. தொடா் மழையால் சந்தானராமா் கோயில் குளம் நிரம்பியுள்ளது. பனி, மழை, குளிா்ந்த காற்று காரணமாக பலா் சளி, காய்ச்சல் போன்ற நோயினால் பாதிக்கப்படுகின்றனா். எனவே, சுகாதாரத் துறையினா் தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொடா் மழையால் பொங்கல் கரும்பு, இஞ்சி மற்றும் மஞ்சள் கொத்து விற்பனை செய்ய தரைக் கடைகள்அமைக்க இயலாத நிலையில்சில்லரை வியாபாரிகள் மற்றும் மண்பாண்ட விற்பனையாளா்கள், வாழைத்தாா் விற்பனையாளா்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.