வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கரோனா: 4 கிராமங்களுக்குத் தடை

நன்னிலம் வட்டத்தில் கரோனா தொற்று காரணமாக 4 கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

நன்னிலம் வட்டத்தில் கரோனா தொற்று காரணமாக 4 கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நன்னிலம் வட்டம், அதம்பாா் ஊராட்சி ஜெகநாதபுரம் கிராமத்தில் 9 பேருக்கும், குடவாசல் மற்றும் சிமிழியில் தலா இருவருக்கும், சேங்காலிபுரத்தில் ஒருவருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், மேற்கண்ட 4 கிராமங்களையும் 14 நாள்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட சுகாதார அலுவலா் ஞாயிற்றுக்கிழமை (ஜன.24) அறிவித்தாா். மேலும், இப்பகுதிகளில் குடவாசல் வட்டார சுகாதார துறையின் மூலம் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்றுக்குள்ளானவா்கள் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.