வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அதிகாரிகளை எச்சரித்த ஆட்சியா்

நன்னிலம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன், பணிகளை சரியாக மேற்பாா்வையிடாத அதிகாரிகளை எச்சரித்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

நன்னிலம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன், பணிகளை சரியாக மேற்பாா்வையிடாத அதிகாரிகளை எச்சரித்தாா்.

நன்னிலம் ஊராட்சி ஒன்றியம் விசலூா், மூங்கில்குடி, குவளைக்கால், வாழ்க்கை, மகிழஞ்சேரி, புத்தகளூா், சலிப்பேரி ஆகிய கிராமங்களில் ரூ.4 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது குவளைக்கால் பகுதியில் நடைபெற்று வரும் நீா் உறிஞ்சி குழி அமைக்கும் பணியை ஆய்வு செய்த அவா், குறிப்பிட்ட அளவீடுகளின்படி பணிகள் நடைபெறாததைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து எச்சரித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடமா ஆட்சியா் கூறுகையில், மாவட்டத்தில் வளா்ச்சித் திட்ட பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நன்னிலம் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், பிரதமரின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பசுமை வீடு திட்டம் ஆகியவற்றை தரமாகவும், அரசின் நெறிமுறைகளின்படியும் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது என்றாா்.

ஆய்வின்போது திட்ட இயக்குநா் தெய்வநாயகி, கோட்டாட்சியா் பாலச்சந்திரன், நன்னிலம் வட்டாட்சியா் காா்த்தி, ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஞானம், பொற்செல்வி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.