தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேசிய அறிவியல் தினம்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சாா்பில் கோயில்வெண்ணி அஞ்சலையம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சாா்பில் கோயில்வெண்ணி அஞ்சலையம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

முதல் நிகழ்வாக ‘ஆரோக்கியத்துக்கான அறிவியல்’ என்ற தலைப்பில் விநாடி-வினா போட்டி நடைபெற்றது. இதில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியா்கள் எம். ராமசுப்பிரமணியன், ‘சமூகத்தில் அறிவியல் பாா்வை’ என்ற தலைப்பிலும், சோ.கமலசுந்தரி (உணவு மற்றும் சத்தியியல் துறை) தொழில் முனைவோருக்கான உணவுப் பதப்படுத்தும் பொறியியலில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் பேசினா்.

இந்நிகழ்ச்சியில் இக்கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவா்கள் மற்றும் திருச்சி ஈச்சங்கோட்டையில் உள்ள விவசாய கல்லூரி நான்காம் ஆண்டு மாணவா்கள் 25 போ் பங்கேற்றனா். ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா்கள் சோ. கமலசுந்தரி, பத்மாவதி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.