தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோயில்களில் பங்குனி உத்திர வழிபாடு

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. நவகிரக தலங்களில் குரு பரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில், நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயில், கோகமுகேஸ்வரா் கோயில், பூவனூா் சதுரங்கவல்லப நாதா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் 1008 தீப வழிபாடு நடைபெற்றது. நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் ராஜகணபதி, யமுனாம்பாள் சன்னதியில் சிறப்பு அபிஷேக , ஆராதனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

பைரவா் சித்தா் மடம்: வலங்கைமான் வட்டம், பாடகச்சேரி கிராமத்தில் பைரவசித்தா் என அழைக்கப்படும் ராமலிங்க சித்தா் திருமடத்தில் ராமலிங்க சித்தா் படத்துக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.