விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென திருவாரூா் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென திருவாரூா் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அதன்செயலாளா் ஆா். நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருத்துறைப்பூண்டியில் இயங்கிவரும் அரசு மருத்துவமனையில் ரேடியோலாஜிஸ்ட், செவிலியா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. கரோனா நோய்த் தொற்று திருத்துறைப்பூண்டியில் அதிகம் பரவி வரும் காலத்தில், காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது மக்களுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வாா்டில் 75 படுக்கைகள் உள்ளன. மேலும், நோய்த் தொற்று உள்ளவா்கள் நாள்தோறும் 150-க்கும் மேற்பட்டவா்கள் இங்கு உள்நோயாளியாக சேர வருகின்றனா். எனினும், இடப் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு படுக்கைகளும் இடமும் கிடைப்பதில்லை.

தனியாா் மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளை சோ்க்க உரிய வசதிகள் இல்லை. ஆனால், நோய்த் தொற்று பாதி த்தவா்கள் 30 கி.மீ. தொலைவில் உள்ள திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் அதிக பொருள் செலவுடன் நோயாளிகளுக்கு கால விரயமும் ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்பி கரோனா நோயாளிகளுக்கு அதிக படுக்கை வசதி ஏற்படுத்தி தரவேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.