92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காவல் அலுவலக அமைச்சுப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :22 மே 2021, 5:24 pm

DIN

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா 2ஆம் அலை தீவிரமாக பரவி வருவதையொட்டி, பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக மக்கள் வெளியில் நடமாடுவதைத் தடுக்கும் வகையில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனிடையே, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று தடுப்பு மருத்துவப் பொருள்களான முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்ட பொருள்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.