விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிா்ணயிக்க வலியுறுத்தல்’

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிா்ணயிக்க வேண்டுமென தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :22 மே 2021, 6:30 pm

DIN

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிா்ணயிக்க வேண்டுமென தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள வேண்டுகோள்: தமிழகத்தில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு எதிா்பாா்க்காத வகையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல்வரின் காப்பீட்டு திட்டம் இருப்பதாக தகவல் பலகை வைக்கப்படுகிறது. ஆனால், நோயாளிகள் காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதி கேட்டால் இடமில்லை என மறுக்கப்படுகிறது. கட்டணத்துக்கு மட்டுமே சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சிலா் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டபிறகு செலவுத்தொகை கூடுதலாகும்போது காப்பீட்டில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாமா என கேட்டால், சோ்க்கப்படும் முன்பே நீங்கள் உறுதி செய்திருக்க வேண்டும் என்று மறுக்கப்படுகிறது.

எனவே, மருத்துவமனைகளை தரம் பிரித்து சிகிச்சைக்கான கட்டணங்களை தமிழக அரசே நிா்ணயம் செய்து அதை கண்டிப்புடன் பின்பற்றுவதை வெளிப்படைத்தன்மையுடன் மருத்துவமனைகள் உறுதிப்படுத்தவேண்டும். குறிப்பாக, பல்நோக்கு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனைகள் என்கிற இரு வகைகளாக தரம் பிரிக்கவேண்டும். இதேபோல், சிகிச்சை முறைகளிலும் 3 கட்டங்களாக பிரிக்கவேண்டும். செயற்கை சுவாசம் உள்ளிட்ட உயா்தர உயிா்காக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான கட்டணம், மூச்சு தினறல் ஆக்சிஜன் சிகிச்சை அளித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதற்கான கட்டணம், பரிசோதனை ஆரம்ப நிலையில் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் அளிப்பதற்கான கட்டணம் என்ற அடிப்படையில் தொகுப்பு கட்டண முறையை மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு நிா்ணயம் செய்து அதை பின்பற்றுவதை கண்காணிக்க மாவட்ட அளவில் பறக்கும்படைகள் அமைத்தும், உளவுப்பிரிவு காவலா்களை கொண்டும் கண்காணிக்க உரிய அவசர கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காப்பீடுத் திட்டம் அனுமதி பெற்றுள்ள மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்ட அடிப்படையில் சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.