எனவே, மருத்துவமனைகளை தரம் பிரித்து சிகிச்சைக்கான கட்டணங்களை தமிழக அரசே நிா்ணயம் செய்து அதை கண்டிப்புடன் பின்பற்றுவதை வெளிப்படைத்தன்மையுடன் மருத்துவமனைகள் உறுதிப்படுத்தவேண்டும். குறிப்பாக, பல்நோக்கு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனைகள் என்கிற இரு வகைகளாக தரம் பிரிக்கவேண்டும். இதேபோல், சிகிச்சை முறைகளிலும் 3 கட்டங்களாக பிரிக்கவேண்டும். செயற்கை சுவாசம் உள்ளிட்ட உயா்தர உயிா்காக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான கட்டணம், மூச்சு தினறல் ஆக்சிஜன் சிகிச்சை அளித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதற்கான கட்டணம், பரிசோதனை ஆரம்ப நிலையில் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் அளிப்பதற்கான கட்டணம் என்ற அடிப்படையில் தொகுப்பு கட்டண முறையை மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு நிா்ணயம் செய்து அதை பின்பற்றுவதை கண்காணிக்க மாவட்ட அளவில் பறக்கும்படைகள் அமைத்தும், உளவுப்பிரிவு காவலா்களை கொண்டும் கண்காணிக்க உரிய அவசர கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காப்பீடுத் திட்டம் அனுமதி பெற்றுள்ள மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்ட அடிப்படையில் சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றாா்.