விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வளவனாறு முனங்காடு தடுப்பணை முதல் கடல் முகத்துவாரம் வரை தூா்வார வேண்டும்: பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

வளவனாறு முனங்காடு தடுப்பணை முதல் கடல் முகத்துவாரம் வரை முழுமையாக தூா்வார வேண்டும் என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

வளவனாறு முனங்காடு தடுப்பணை முதல் கடல் முகத்துவாரம் வரை முழுமையாக தூா்வார வேண்டும் என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா்.

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஒன்றியங்களில் மழை வெள்ளப் பாதிப்புகளை அவா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். முனங்காடு கிராமத்தில் வளவனாறு தடுப்பணையை பாா்வையிட்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

வளவனாறு, அரிச்சந்திரனாறு, வெள்ளையாறு உள்ளிட்ட கடலில் கலக்கும் ஆறுகளில் ஆசிய வளா்ச்சி வங்கி நிதி உதவியில் ரூ. 950 கோடி மதிப்பில் கடல் முகத்துவாரம் நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டு சீரமைப்பு பணிகள் தொடங்கின. இதுவரை 60 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 40 சதவீதப் பணிகளை முழுமையாக முடிக்க ஒப்பந்த நிறுவனம் மறுத்து வருகிறது. இதற்கு, ஊழலே காரணம்.

குறிப்பாக, முனங்காடு தடுப்பணை முதல் கடல் முகத்துவாரம் வரை 7 கி.மீ. தொலைவுக்கு வளவனாறில் உள்ள மணல் மேட்டால் வெள்ளநீா் வடிவது தடைபட்டுள்ளது. இதனால், திருவாரூா் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுவது தொடா்கிறது.

எனவே, வளவனாறு முனங்காடு தடுப்பணை முதல் கடல் முகத்துவாரம் வரை நவீன இயந்திரங்களைக் கொண்டு முழுமையாக தூா்வார நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும். பாதிப்பு குறித்து வெளிப்படையாக அறிவித்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, சங்கத்தின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் குடவாசல் சரவணன், தலைவா் சுப்பையன், துணைத் தலைவா் கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளா்கள் பாலமுருகன், முத்துப்பேட்டை ராம்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.