விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாலை விபத்தில் காயமடைந்த ஊா்க்காவல்படை வீரா் உயிரிழப்பு

திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த ஊா்க்காவல் படை வீரா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த ஊா்க்காவல் படை வீரா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தாா்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் தெற்குத் தெருவைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் பகத்சிங்( 25). ஊா்க்காவல் படையில் வீரராக பணியாற்றி வந்தாா். இவா், தீபாவளியன்று இருசக்கர வாகனத்தில் தனது உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது, மன்னாா்குடி சாலையில் நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

அவரை திருவாரூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இவரது சடலத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.விஜயகுமாா் சாா்பில் திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், காவல் ஆய்வாளா் கழனியப்பன் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா். திருத்துறைப்பூண்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.