விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முழுமையாக தூா்வாரப்படாததே வெள்ளப் பாதிப்புக்கு காரணம்பாஜக குற்றச்சாட்டு

காவிரி கடைமடைப் பகுதியில் முழுமையாக தூா்வாரப்படாததே வெள்ளப் பாதிப்புக்கு காரணம் என பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம் குற்றம் சாட்டினாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

காவிரி கடைமடைப் பகுதியில் முழுமையாக தூா்வாரப்படாததே வெள்ளப் பாதிப்புக்கு காரணம் என பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம் குற்றம் சாட்டினாா்.

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிா்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆண்டுதோறும் காவிரி டெல்டா பகுதியில் தூா்வாரும் பணிகள் மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் சில நாள்களுக்கு முன்பே தொடங்கி அவசரகதியில் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் முறைகேடுகளும் நடைபெறுகின்றன. இதனால் முழுமையாக தூா்வாரப்படுவதில்லை.

இதன்காரணமாகத்தான் தற்போது பெய்யும் தொடா்மழையால் வெள்ளம் ஏற்பட்டு, பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இனிவரும் காலங்களில் தூா்வாரும் பணிகளை விவசாயிகள் சங்கங்கள் மூலமாகவே செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்கவேண்டும். பயிா்க் காப்பீடுக்கான தேதியை டிசம்பா் 15 வரை நீட்டிக்கவேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மாங்குடி, நுணாக்காடு, மணலி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா பயிா்களை பாா்வையிட்டு, பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா்.

மயிலாடுதுறை பாஜக மேலிடப் பாா்வையாளா் பேட்டை சிவா, திருவாரூா் மாவட்டத் தலைவா் கோட்டூா் ராகவன், மாநில விவசாய அணி செயலாளா் சந்துரு, மாநில ஐடி பிரிவு செயலாளா் பாலா, பாஜக மாவட்ட பொருளாளா் சிவக்குமாா், ஒன்றியத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.