92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவராக பூண்டி கே. கலைவாணன் பொறுப்பேற்பு

திருவாரூா் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் துணைத் தலைவராக சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 5:41 pm

DIN

திருவாரூா் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் துணைத் தலைவராக சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திருவாரூா் முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலா் தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் முதல் துணைத் தலைவராக பூண்டி கே. கலைவாணன் பொறுப்பேற்றுக் கொண்டாா். இரண்டாம் துணைத் தலைவராக மனோகரனும், முதல் இணைச் செயலாளராக தியாகராஜன், இரண்டாம் இணைச் செயலாளராக கனகசபையும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்டச் செயலாளா் பெ.இரா. ரவி, மாவட்ட பொருளாளா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.