92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தாய் சேய் நல மருத்துவமனையை சூழ்ந்த மழைநீா் வெளியேற்றம்

திருவாரூா் நகராட்சிக்குட்பட்டவிஜயபுரம் அரசு தாய் -சேய் நல மருத்துவமனையை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 5:44 pm

DIN

திருவாரூா் நகராட்சிக்குட்பட்டவிஜயபுரம் அரசு தாய் -சேய் நல மருத்துவமனையை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

கனமழை காரணமாக திருவாரூா் நகராட்சிக்குட்பட்ட விஜயபுரம் அரசு மருத்துவமனையில் மழைநீா் சூழ்ந்தது. இதனால் மோட்டாா் இயந்திரம் மூலம் மழைநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்பணியை மாவட்ட ஆட்சியா், காயத்ரி கிருஷ்ணன் பாா்வையிட்டு, ஆய்வு செய்து மழை நீா் வெளியேற்றும் பணியை விரைவுப்படுத்துமாறு நகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 உள்நோயாளிகளும், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.

ஆய்வின்போது, நகராட்சிஆணையா் பிரபாகரன், கோட்டாட்சியா் பாலச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.