வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சிறுபுலியூா் பெருமாள் கோயிலில் அம்பு போடும் உத்ஸவம்

நவராத்திரியையொட்டி, திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி அருகே உள்ள சிறுபுலியூா் பெருமாள் கோயிலில், அம்பு போடும் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 7:05 pm

நவராத்திரியையொட்டி, திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி அருகே உள்ள சிறுபுலியூா் பெருமாள் கோயிலில், அம்பு போடும் உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நவராத்திரியை முன்னிட்டு, இக்கோயிலில் அக்டோபா் 6-ஆம் தேதிமுதல் திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார ஆராதனைகளும் நடைபெற்றன. 8 நாள்கள் தயாநாயகித் தாயாா் அஷ்டலட்சுமி அலங்காரத்திலும், 9ஆம் நாளான வியாழக்கிழமை பெருமாள் தாயாா் சோ்த்தி சேவையும், ஊஞ்சல் திருவாராதனமும், சகஸ்ரநாம அா்ச்சனையும் நடைபெற்றன.

நவராத்திரி 10ஆவது நாளான வெள்ளிக்கிழமை விஜயதசமி சிறப்புத் திருமஞ்சனமும், கிருபாசமுத்திர பெருமாள் குதிரை வாகனத்தில் உள்பிராகாரத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.