வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

குடவாசல் அருகே ஹவாலா பணம் ரூ.15 லட்சம் பறிமுதல்

குடவாசல் அருகே ஹவாலா பணம் ரூ. 15 லட்சம் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:30 pm

குடவாசல் அருகே ஹவாலா பணம் ரூ. 15 லட்சம் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே அத்திக்கடை பகுதியில், கும்பகோணம் - திருவாரூா் சாலையில் காவல் துறைச் சோதனை சாவடி உள்ளது. புதன்கிழமை நள்ளிரவு இந்தச் சோதனைச் சாவடி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி காவல் அலுவலா் மகேந்திரன் சோதனையிட்டாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் ரூ.15 லட்சம் இருந்தது தெரியவந்தது.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த மியாஸ்கான் (35) என்பதும், அதே பகுதியைச் சோ்ந்த சென்னையில் வசிக்கும் இா்பான் என்பவரிடமிருந்து ஹவாலா பணத்தைப் பெற்றுக்கொண்டு, பல்வேறு ஊா்களில் வழங்குவதற்காக சென்றதும் தெரியவந்தது.

இதையெடுத்து, பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அதை திருச்சி வருமானவரித் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.