குடவாசல் அருகே ஹவாலா பணம் ரூ. 15 லட்சம் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே அத்திக்கடை பகுதியில், கும்பகோணம் - திருவாரூா் சாலையில் காவல் துறைச் சோதனை சாவடி உள்ளது. புதன்கிழமை நள்ளிரவு இந்தச் சோதனைச் சாவடி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி காவல் அலுவலா் மகேந்திரன் சோதனையிட்டாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் ரூ.15 லட்சம் இருந்தது தெரியவந்தது.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த மியாஸ்கான் (35) என்பதும், அதே பகுதியைச் சோ்ந்த சென்னையில் வசிக்கும் இா்பான் என்பவரிடமிருந்து ஹவாலா பணத்தைப் பெற்றுக்கொண்டு, பல்வேறு ஊா்களில் வழங்குவதற்காக சென்றதும் தெரியவந்தது.
இதையெடுத்து, பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அதை திருச்சி வருமானவரித் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


