63,200 பேருக்கு நாளை கரோனா தடுப்பூசி: பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்
திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறும் 63,200 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்


திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறும் 63,200 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 633 இடங்களில் 63,200 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டம் வெற்றியடைய, திருவாரூா் மாவட்ட மக்கள் நல இயக்கங்கள், சமூக ஆா்வலா்கள், நுகா்வோா் இயக்க உறுப்பினா்கள் மற்றும் செயல்பாட்டாளா்கள் ஆகியோா் ஒருங்கிணைந்து, 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உறுதுணையாக இருக்க வேண்டும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...