மணல் கடத்தல்:குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு
திருவாரூரில், தொடா் மணல் கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.


திருவாரூரில், தொடா் மணல் கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
நீடாமங்கலம் காவல் சரகப் பகுதிகளில் தொடா் மணல் கடத்தல் நடைபெறுவதாக வந்த புகாரின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, வெள்ளங்குழி, தோப்புத்தெரு பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் காமராஜ் (39) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடா் மணல் கடத்தலில் ஈடுபட்ட காமராஜை, குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் பரிந்துரைத்தாா். அவரின் பரிந்துரையை ஏற்று, குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, காமராஜ், திருச்சி மத்திய சிறையில், புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...