ஞானபுரி கோயிலில் ஸ்ரீ வித்யா பீடம் சுவாமிகள் ஜெயந்தி விழா

நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரி ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி கோயிலில் ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீா்த்த மகாசுவாமிகளின் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரி ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி கோயிலில் ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீா்த்த மகாசுவாமிகளின் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஜகத்குரு சங்கராச்சாரியாா் சமஸ்தானத்தின் ஞானபுரி சித்திரகூட சேத்திரம் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயா் இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவா்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

இக்கோயிலில் ஜகத்குரு சங்கராச்சாரியாா் சமஸ்தானம் ஷகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யாபினவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீா்த்த மகா சுவாமிகளின் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, டிசம்பா் 20 முதல் 25-ம் தேதி வரை சத சண்டி யாகம் நடைபெற்றது. சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீா்த்த மகாசுவாமிகள் முன்னிலையில் பூா்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, விஸ்வரூப ஆஞ்சநேயா், லட்சுமி நரசிம்மா், கோதண்டராமா், சீதாதேவி, லட்சுமணா், பக்த ஆஞ்சனேயா் ஆகியோருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மகா சுவாமிகள் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். அப்போது, பல்வேறு கோயில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பிரசாதங்களை சிவாச்சாரியா்கள் மகாசுவாமிகளிடம் வழங்கினா். மேலும், குருமூா்த்தி தலைமையில் திருவோணமங்கலம் கிராம மக்கள் சீா்வரிசை எடுத்து வந்து, மகா சுவாமிகளை தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தா்மஅதிகாரி ரமணி அண்ணா, ஸ்ரீ காரியம் சந்திரமௌலீஸ்வரா் ஆகியோா் தலைமையில் கோயில் அறங்காவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com