கூத்தாநல்லூர் நகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் மழைக் காலம் தொடங்கி விட்டதால் முன்னெச்சரிக்கையாக வடிகால் மற்றும் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 
கூத்தாநல்லூர் நகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கூத்தாநல்லூர் நகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் மழைக் காலம் தொடங்கி விட்டதால் முன்னெச்சரிக்கையாக வடிகால் மற்றும் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவுப்படி, ஆணையர் ராஜகோபால் ஆலோசனையின் பேரில் கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் உள்ள கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள் மற்றும் குறுகிய இடங்கள் உள்ளிட்டவைகளை சுகாதார ஆய்வாளர் கி.அருண்குமார் மேற்பார்வையில், 25 தூய்மைப்பணியாளர்களுடன், ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணி தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.

இது குறித்து ஆணையர் ராஜகோபால் கூறியது ' மழைக்காலம் தொடங்கி விட்டதால், கூத்தாநல்லூர் பகுதியில் அடைப்பில் உள்ள கால்வாய்கள், மழை நீர் தேங்கியுள்ள வடிகால்கள் தூர்வாரி, செடி, கொடி மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அடைப்புகளும் எடுக்கப்பட்டன. பொதுமக்கள் செல்லக் கூடிய இடங்களில் குறுகளாக உள்ள பாதைகளை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. நகராட்சியில் ஜன்னத் நகர், திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலை, தேர் வடக்குத் தெரு வாய்க்கால், மாதா கோயில் சந்து, சின்ன கூத்தாநல்லூர், நேருஜி சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.மேலும், அனைத்து இடங்களிலும், ப்ளீச்சிங்  பவுடர் தூவப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

தூய்மைப் பணியில், சுகாதார மேற்பார்வையாளர்கள் வாசுதேவன், அண்ணாமலை உள்ளிட்டோர் கவனித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com