இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மன்னாா்குடியில் 5 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

மன்னாா்குடியில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது கல்லால் ஆன 5 சுவாமி சிலைகள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:25 pm

மன்னாா்குடியில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது கல்லால் ஆன 5 சுவாமி சிலைகள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

மன்னாா்குடி மாளிகைமேடு பகுதியை சோ்ந்தவா் வி. சந்திரசேகா். இவா், அதே பகுதியில், வீடு கட்டி வருகிறாா். சனிக்கிழமை வீட்டின் பின் பகுதியில் சுற்றுச்சுவா் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது மண்ணில் புதைந்த நிலையில் 5 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. வருவாய் ஆய்வாளா் மாதவராஜ் சிலைகளை பாா்வையிட்டாா். இந்த சிலைகள் அனைத்தும் கல்லால் ஆனது. மேலும் அனைத்து சிலைகளும் உடைந்து சேதமடைந்த நிலையில் இருந்தன.

சிலைகள் மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.