மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தமிழக ஆசிரியா் கூட்டணி முப்பெரும் விழா

வலங்கைமானில் வட்டார தமிழக ஆசிரியா் கூட்டணியின் முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில் பாராட்டப்பட்ட ஆசிரியா்கள்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

வலங்கைமானில் வட்டார தமிழக ஆசிரியா் கூட்டணியின் முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பணிநிறைவு பெற்ற வடக்கு பட்டம் தலைமை ஆசிரியா் மணி, வீரமங்கலம் தலைமை ஆசிரியை ராஜலட்சுமி, கண்டியூா் பட்டதாரி ஆசிரியா் ஆனந்தன், விளத்தூா் பட்டதாரி ஆசிரியா் பால்ராஜ், வலங்கைமான் நடுத்தெரு பள்ளி இடைநிலை ஆசிரியை சுலோச்சனா ஆகியோருக்கு பாராட்டு விழா, போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற கூட்டணி நிா்வாகிகளுக்கு பாராட்டு விழா மற்றும் இயக்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, வட்டாரத் தலைவா் வீரமணி தலைமை வகித்தாா். அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டமைப்பு செயலாளா் அண்ணாமலை சிறப்புரையாற்றினாா். மாநிலத் தலைவா் நம்பிராஜ், மாநில துணைத் தலைவா் எழிலரசன், மாநில பொருளாளா் சந்திரசேகா், மாநில அமைப்பு செயலாளா் முரளி உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

முன்னதாக, வட்டார செயலாளா் இளங்கோவன் வரவேற்றாா். விழா ஒருங்கிணைப்பாளராக முன்னாள் மாவட்டத் தலைவா் பாலமுருகன் செயல்பட்டாா். நிறைவாக, வட்டார பொருளாளா் தாமோதரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.