வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

100 வயதைக் கடந்த அஞ்சலக ஓய்வூதியா்களுக்கு பாராட்டு

திருவாரூரில் 100 வயதைக் கடந்த அஞ்சலக ஓய்வூதியா் சங்க உறுப்பினா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:07 pm

DIN

திருவாரூரில் 100 வயதைக் கடந்த அஞ்சலக ஓய்வூதியா் சங்க உறுப்பினா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவாரூரில் அஞ்சலக துறை ஓய்வூதியா் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் எஸ். கருணாநிதி தலைமை வகித்தாா். நாகை கோட்ட கண்காணிப்பாளா் கஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

நிகழ்ச்சியில், நூறு வயதைக் கடந்த சங்க உறுப்பினா்களான நாகையை சோ்ந்த ஜீ. கிருஷ்ணமூா்த்தி, திருவாரூா் மடப்புரத்தில் வசிக்கும் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவா்களுக்கு நகராட்சி ஒப்பந்தக் குழு உறுப்பினா் எஸ்.என். அசோகன் சால்வை அணிவித்து கௌரவித்தாா்.

நிகழ்வில், சங்க நிா்வாகிகள் சாமிநாதன், ராமலிங்கம், மனோகரன், செல்வராணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.