கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கூத்தாநல்லூர்: அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்பு

கூத்தாநல்லூர் நகர அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. 

News image
கூத்தாநல்லூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்பு.
Updated On :5 டிசம்பர் 2022, 6:57 am

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. 
கூத்தாநல்லூர் - வடபாதிமங்கலம் பிரதான சாலையில் அமைந்துள்ள
நகர அதிமுக அலுவலகத்திலிருந்து, நகரச் செயலாளர் ஆர்.ராஜசேகரன் தலைமையில், அவைத் தலைவர் ஆர்.குமார், பொருளாளர் ஜெ.சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில், நகர துணைச் செயலாளர் கொய்யா பீ.மீரா மைதீன், ஜெயலலிதா பேரவை நகரச் செயலாளர் எஸ்.பி. காளிதாசன், நகர மன்ற உறுப்பினர்கள் முருகேசன், ஏ.சொற்கோ, நகர இளைஞர், இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் வி.எஸ்.நெடுமாறன், நகர் மன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.கருணாநிதி, டி.கண்ணையன், விக்ரமன் மற்றும் எல்.பி. முஹம்மது முகைதீன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர். 

Story image


லெட்சுமாங்குடிப் பாலத்தருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்திற்கு, மாலையணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கூத்தாநல்லூர் நகர அதிமுகவினர் கவனித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.