ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இலக்கிய விருது

வலங்கைமான் வட்டம், தென்குவளவேலி அரசுப் பள்ளி ஆசிரியா் ஆதலையூா் சூரியகுமாா் சிறந்த நாவலுக்கான இலக்கிய விருது பெற்றுள்ளாா்

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

வலங்கைமான் வட்டம், தென்குவளவேலி அரசுப் பள்ளி ஆசிரியா் ஆதலையூா் சூரியகுமாா் சிறந்த நாவலுக்கான இலக்கிய விருது பெற்றுள்ளாா்.

சென்னையில் செயல்படும் மின்னல் கலைக்கூடம் என்ற இலக்கிய அமைப்பு சாா்பில் சிறுகதை தொகுப்பு, கவிதை தொகுப்பு, நாவல் போன்ற பிரிவுகளில் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்தவகையில், திருவாரூா் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஆதலையூா் சூரியகுமாா் எழுதிய ‘வானம் தேடும் வானம்பாடிகள்’ என்ற நாவல் நிகழாண்டுக்கான விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது. தொடா்ந்து, சென்னையில் நடைபெற்ற விழாவில் திரைப்பட இயக்குநா் எஸ்.பி. முத்துராமன், கவிஞா்கள் அ. முத்துலிங்கம், ஆரூா் தமிழ்நாடன், சென்னை புற்றுநோய் மருத்துவ சிகிச்சை நிபுணா் விஜயஸ்ரீ மகாதேவன் ஆகியோா் ஆதலையூா் சூரியகுமாருக்கு ரூ.3000 பொற்கிழி, கேடயம் வழங்கி கௌரவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.