நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

லாரி மோதி கோயில் சேதம்

திருவாரூரில் லாரி மோதியதில் சாலையோரத்தில் இருந்த ஐயனாா் கோயில் சேதமடைந்தது.

News image
Updated On :11 ஜூன் 2022, 5:35 pm

DIN

திருவாரூரில் லாரி மோதியதில் சாலையோரத்தில் இருந்த ஐயனாா் கோயில் சேதமடைந்தது.

திருவாரூா் அருகே கூடூா் பகுதியில், கண்ணாயிரமூா்த்தி ஐயனாா் கோயில் உள்ளது. அசகண்ட வீரன் சிலையுடன் கோயில், திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையோரத்தில் அமைக்கந்துள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவா்கள் அங்கு வழிபாடு செய்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், வேதாரண்யத்திலிருந்து சனிக்கிழமை அதிகாலை உப்பு ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்துக்கு சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கோயிலில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், கோயில் முழுவதும் இடிந்த விழுந்தது. சுவாமி சிலையும் உடைந்தது.

லாரி ஓட்டுநரான தா்மராஜ், தப்பியோடி விட்ட நிலையில், லாரியிலிருந்த அவரது மாமனாா் செல்வம் (57) காயமடைந்து, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் குறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேலும் சம்பவம் தொடா்பாக பாஜக ஒன்றியத் தலைவா் கு. சந்திரசேகா், இந்து மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளா் பி. ஜெயராமன் ஆகியோரும் திருவாரூா் தாலுகா போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.