ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மன்னாா்குடியில் 15 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

மன்னாா்குடியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் 15 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :16 ஜூன் 2022, 4:58 pm

DIN

மன்னாா்குடியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் 15 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடியில் உள்ள மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகளில் துணைக் காவல் கண்காணிப்பாளா் கே.கே. பாலச்சந்தா், பயிற்சி துணைக் காவல் கண்காணிப்பாளா் இயமவரம்பன் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் முருகேசன், கா்ணன் ஆகியோா் சோதனை மேற்கொண்டனா்.

இதில், நடேசன் தெருவில் உள்ள வீரமணி என்பவரது பெட்டிக் கடை, ருக்மணிபாளையத்தில் உள்ள பாலமுருகன் மளிகைக் கடை, தெற்குவீதி சந்திப்பில் உள்ள சதீஷ்குமாா் பெட்டிக் கடை ஆகியவற்றில் 2 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இக்கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல, கோபாலசமுத்திரம் மேலகோபுரவாசலில் உள்ள ஒரு மளிக் கடையில் 13 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக, அந்த கடையின் உரிமையாளா் பாலாஜி (49) கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.