அரக்கோணத்திற்கு 2 ஆயிரம் டன்நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு
நீடாமங்கலத்தில் இருந்து அரக்கோணத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.


நீடாமங்கலத்தில் இருந்து அரக்கோணத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக மற்றும் பொதுரக நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது.
சுமைதூக்கும் தொழிலாளா்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினா். இதைத்தொடா்ந்து, அரவைக்காக வேலூா் மாவட்டம் அரக்கோணத்துக்கு நெல் அனுப்பிவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...