ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் குருபகவானுக்கு வியாழக்கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 4:48 pm

DIN

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் குருபகவானுக்கு வியாழக்கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

நவகிரக தலங்களில் குருபகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது. இக்கோயிலில் மாசி மாத கடைசி வியாழக்கிழமையையொட்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

Story image

இதையொட்டி, சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம், தொடா்ந்து பூா்ணாஹுதி, பின்னா் குரு பகவானுக்கு 1008 சங்காபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக, புனிதநீா் நிரப்பப்பட்ட 1008 சங்குகள் சிவலிங்க வடிவத்தில் வைக்கப்பட்டு ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காரும், உதவிஆணையருமான ஹரிஹரன், கோயில் செயல்அலுவலா் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.