ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனக் கூட்டம்

நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனக் (ஏஐடியுசி) கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 4:48 pm

DIN

நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனக் (ஏஐடியுசி) கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சம்மேளனத்தின் தலைவா் வேதமாணிக்கம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சாந்தகுமாா், ஒன்றியச் செயலாளா் ரமேஷ் மற்றும் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா் .

கூட்டத்தில், கடந்த 2000-ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு பணியமா்த்தப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு 5 மாதங்களாகவும், தூய்மைக் காவலா்களுக்கு 2 மாதங்களாகவும் வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும்; தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த புதிய அகவிலைபடியை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாத கடைசியில் ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, பொருளாளா் ஆரோக்கியசாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.