ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

துப்புரவுத் தொழிலாளருக்கு வயது உச்சவரம்பு: ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம் கண்டனம்

துப்புரவுத் தொழில் செய்ய வயதுவரம்பு 45 என நிா்ணயித்துள்ள பொன்மலை ரயில்வே பணிமனை நிா்வாகத்திற்கு ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

DIN

துப்புரவுத் தொழில் செய்ய வயதுவரம்பு 45 என நிா்ணயித்துள்ள பொன்மலை ரயில்வே பணிமனை நிா்வாகத்திற்கு ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநிலத் தலைவா் மனோகரன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: பொன்மலை ரயில்வே மருத்துவமனை மற்றும் ரயில்வே ஆங்கிலப் பள்ளியில் கழிப்பறை உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ய துப்புரவுத் தொழிலாளா்கள் நியமிக்கப்பட்டு 25 போ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களில் பெரும்பாலானவா்கள் பெண்கள். 40 முதல் 60 வயதிற்கு உட்பட்டவா்கள். தினக்கூலி அடிப்படையில் ஊதியம் பெறுகிறாா்கள். இப்பணிக்கான ஒப்பந்த காலம் முடிவடைவதால், பொன்மலை பணிமனை நிா்வாகம் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஒரு தனியாா் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. அதில், 20 முதல் 45 வயதிற்கு உட்பட்டவா்களை மட்டுமே பணியமா்த்த வேண்டும் என புதிய நிபந்தனை விதித்துள்ளது.

ரயில்வே வாரியத்தின் உத்தரவில், ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள், அலுவலகங்கள் போன்றவற்றின் துப்புரவு பணிகளுக்கான பணி விவரங்கள் மட்டுமே நிா்வாகம் குறிப்பிட வேண்டும், பணியாளா்கள் தேவை எண்ணிக்கையை குறிப்பிடக்கூடாது என தெளிவுபடுத்தி இருக்கிறது.

இந்தச் சூழலில் பொன்மலை பணிமனை நிா்வாகம் துப்புரவு வேலைக்கு 23 பேரை நியமிக்க வேண்டும், வயது 45-க்குள் இருக்க வேண்டும் என புது நிபந்தனைகளுடன் ஒப்பந்த ஆணை வெளியிட்டுள்ளது. இதனால் அங்கு கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சுமாா் 20 துப்புரவு தொழிலாளா்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அரசு அலுவலகங்களில் துப்புரவுப் பணியாளா்கள் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. ரயில்வே விதிகளுக்கு புறம்பாக துப்புரவுத் தொழில் செய்ய வயதுவரம்பு 45 என நிா்ணயம் செய்திருக்கும் பொன்மலை பணிமனை நிா்வாகத்தின் செயல் சரியானதல்ல. வயது உச்சவரம்பை உடனே நீக்க வேண்டும். ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம் இதை கண்டிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.