ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

DIN

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கோயிலில் சக்தி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ஸ்ரீ அம்பாள் திருவுருவப்பட ஊா்வலமும், இரவில் பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் ரமேஷ், ஆய்வாளா் ரமணி மற்றும் வரதராஜம்பேட்டை பகுதி மக்கள் நலச்சங்கம் மற்றும் இளைஞா் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.

இந்த கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 13) காப்புகட்டும் நிகழ்ச்சியும், மாா்ச் 27 ஆம் தேதி பாடைக் காவடி திருவிழாவும், ஏப்ரல் 3 ஆம் தேதி புஷ்ப பல்லக்கு விழாவும் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.