ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தீக்காயமடைந்த பெண் பலி

வலங்கைமான் அருகே தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:30 pm

DIN

வலங்கைமான் அருகே தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வலங்கைமான் அருகேயுள்ள மணலூரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மனைவி இலக்கியா (28). குடும்ப பிரச்னை காரணமாக இலக்கியா மாா்ச் 11-ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டாா். இதில் காயமடைந்த இலக்கியா தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இறந்த இலக்கியாவுக்கு 5 வயதில் மகன், 3 வயதில் மகள் உள்ளனா். இவருக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் இவரது மரணம் குறித்து திருவாரூா் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.